செவ்வாய், 29 ஜனவரி, 2013

என் தோழி !!! 



அன்னை தைதுக்கொண்டிருந்தால் என் கிழிந்த சட்டையை !!!
ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியும்
என் இதயம் கிழிந்தது உன் காதல் தைத்ததால் என்று !!!
என்று  என் இதயம் தைக்க வருவாய் என்று காத்துகொண்டு இருகிறேன் என் தோழி !!!

என் உடைந்த இதயம் !!! 




எத்தனை முறை உடைத்துவிட்டு சென்றாலும் ,
என் இதயத்தை உன் பாதங்களில் சமர்ப்பணம் செய்வேன் என் தோழி !!!

விவேகமில்ல தலைமுறை !!! 




இன்றைய திருமணங்கள் காலை மண்டபத்தில் நிச்சயிக்கபட்டு
மாலை நீதிமன்றங்களில் நிராகரிக்கப் படுகின்றன !!! ( இளைய தலைமுறைகள் அனைத்திலும்  அதிவேகம் தான் . ) 

வானவில்!!! 



இயற்கையின் வர்ணஜாலம் ...
மழையின் நட்பு !!
வானவில்!!!

வாசல் தெளித்து ...
இறைவனிட்ட கோலமோ !!
வானவில்!!!

இயற்கையை வர்ணமிட ...
ஏரியபட்ட தூரிகையோ !!
வானவில்!!!
  

யோசனை !!! 



இரவின் மடியில்
மௌனமே சுகமாய்...
தென்றல் சில்லென்று
காதருகே தாலாட்ட ...
என் விழிகள் அணைகட்டி
 விடியலை நோக்கி காத்திருக்க ...
என் நெஞ்சம் மட்டும்
ஏதோ யோசித்து கொண்டிருந்தது...
(அட நாளைக்கு reopening பா hostel  போகணுமே அதான்.. so sad  :( )  

இளைஞனே !!! 



வெற்றிக்கு எல்லை நியமிக்கதே ...
அந்த வானமே உன் புகழுக்கு எல்லையாய் அமைந்திடும் !!!
மேலே பார்த்து அயர்ந்து விடாதே ...
கீழே பார்த்து அமர்ந்து விடாதே ...
சாதிக்கும் வேகத்தில் சிலந்தி வலையில் சிக்கி விடாதே ...
செயலில் விவேகம் காட்டு !!!
சிந்தனைக்கும் இடம் கொடுத்து ...
சிகரத்தில் வெற்றி கொடியை நாட்டிவிடு !!! 

மயிலே!!! 



வண்ண வண்ண மயிலே ...
வானவில்லின் வர்ணத்தை உன் தோகையில் சிறைபிடித்தாயோ!!!

பூக்கள் .... 

வான்மரம் தூவும் வெண்ணிற பூக்கள் சேகரிப்பேன் ......
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்துவைப்பேன் ....
அப்பூக்கள் உன் கார்கூந்தல் சேர பார்த்திருப்பேன் ...

நட்பு !!!

என் சோகங்கள் பகிரும் அன்னையாய் ...
என் வெற்றியை கொண்டாடும் சுற்றமாய் ...
என் கண்ணீர் துடைக்கும் விரலாய் ...
என்னை  தோல்வியில் மீட்கும் கரமாய் ....
என்றும் நீ வேண்டும் என் அருகில் ...
என் நட்பை பகிரும் என் தோழியாய் ...

காலம் 

காலதேவன் மனம்வைக்கும் கனநேரம்வரை ....
உன்னை காண காத்திருபேன் ...
உன் நினைவோடு ...

 


வலி

துன்பத்தின் வலியை அனுபவித்ததில்லை
உன் கண்ணீர் துளிகளை காணும் வரை... 

அம்மா 

சிகரங்கள் பல தொட்டாலும்,
உயரங்கள் பல கடந்தாலும் ,
உன் மடி தேடும் சிருமியாய் நான்...

 

 

புத்தகம் 

தேர்வு நாட்களில் பொக்கிஷமாய்

பிறநாட்களில் தலையணையாய்
                                                        -புத்தகம்

 

 

பள்ளி... கல்லூரி... 

  பள்ளி நாட்களில் சுற்றித்திரிந்தேன்

                           கல்லூரி கனவுகளுடன் ...
கல்லூரி நாட்களில் சுற்றித்திரிந்தேன்
                         பள்ளியின் நினைவுகளுடன் ...


 

 

உன்னால் ...!!! 

ஒற்றை பார்வை வீசிசென்றாய்
        எந்தன் இதயம் வீல்திசென்றாய் ...
ஒற்றை வார்த்தை பேசிப்போனாய்
        ஒரு சொல்லால் வாழ்வின் அர்த்தம் சொன்னாய் ...
நித்தம் நித்திரை கலைவதென்ன
          சிந்தையில் நீயும் நிறைவதென்ன ...
நித்தம் நீ பேசும் மொழி கேட்டு
        எந்தன் இதயம் துள்ளக்கண்டேன் ....
கஷ்டங்களை இஷ்டமாய் ஏற்றுகொண்டேன்
        எந்தன் அருகில் நீ இருந்தால் ....


 

 

என் வாழ்வின் .. 

பூமியில் என் முதல் உறவு - அம்மா

பூமியில் என் முதல் காதல்  - அப்பா

பூமியில் என் முதல் நட்பு  - அக்கா

பூமியில் என் முதல் பொக்கிஷம்  - தங்கை

பூமியில் என் முதல் அரவணைப்பு  - அண்ணா


பூமியில் என் முதல் அன்பு  - தம்பி

பூமியில் நான் விரும்பிய உறவு - தோழி





தனிமை... 


தனிமையை உணரும் என் இதயத்திற்கு ...
அதை உணர்த்திட வார்த்தைகள் கிடைக்கவில்லை ..

 

 

மௌனம் 

நேசிக்கும் இதயத்தை தண்டிக்கும் ஓர் மொழி ....

- மௌனம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக