புதன், 20 பிப்ரவரி, 2013

…! .ஒரு பெண்ணை காதலிக்கற விஷயத்தை அவகிட்டே சொன்னா அவளுக்கு தாங்குற சக்தி இருக்க வேண்டும்…
அப்புறம்?
அந்த விஷயத்தை அவ அண்ணன்கிடே சொன்னா,
நமக்கு தாங்கற சக்தி இருக்க வேண்டும்..!

சென்னைக்கு எத்தனை மணிக்கு பஸ்..?
9 மணிக்கு..
அதுக்கு முன்னாடி எதுவும் இருக்கா..?
ஓ இருக்கே.. ரெண்டு டயர், லைட், கண்ணாடி எல்லாம் இருக்கு


சாயங்காலம் கூவற மாதிரி எங்கேயாவது சேவல் ஒன்னு கிடைக்குமா?
எதுக்கு?
எங்க ஆபிசுக்குத்தான்!

நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம்….. செய்யணும் டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன்….. காரியம் எல்லாம் ஐயர் தான் செய்வார். …

“நீங்க இப்ப மிகப்பெரிய கண்டத்துல இருக்கீங்க…” “ஆமா… நானும் படிச்சிருக்கேன்! ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!”

என்னங்க வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளா?
உங்களுக்குத்தான் வீடே கிடையாதே?
அதனால்தான் வீட்டோட கேட்கிறேன்!

புத்தகம் படிச்சதுக்காக டாக்டரை கைது பண்ணிட்டாங்களா..?
அப்படி என்ன புத்தகம் படிச்சார்? முப்பது நாளில் டாக்டர் ஆவது எப்படின்னனு புத்தகம்
படிச்சாராம்…!

எதுக்கு டாக்டர் உங்களுடன் என்னை வர வேண்டாம்னு
சொல்றீங்க? நர்ஸ் , நீ வந்தால் பேஷண்டுகளின் பிபி எகிறிடுது…
அதனால் சரியான பி.பி.யைக் கண்டு பிடிக்க முடியலை…!

” ஏதோ ….உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது ! “
” அப்படியா… இல்லைன்னா ?”
” நிறையவே பெய்யும் ! “

“கண்ணே, நம்ப காதலைப் பத்தி யார் கிட்டேயும் சொல்லிடாதே” “மூளையில்லாதவன் கூட உன்னை காதலிக்க மாட்டான்னு சொன்ன ராதாகிட்ட மட்டும் சொல்றேனே!.”

கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?”
“கோழியினால்தான் முட்டை வந்தது”
“எப்படி?”
“ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை

காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது!
ஆனால் வேறு ஃபிகருக்கு மாற்றிக் கொள்ள முடியும்!

ஒண்ணு கவனிச்சீங்களா? கரெக்டா ஃபிப்ரவரி 14த்-காதலர் தினம்(VALENTAIN’S DAY)!லிருந்த்து பத்தாவது மாதம், நவம்பர் 14த்- குழந்தைகள் தினம்.(CHILDRENS DAY!.)! Just for your attention.
இட்லிக்கும் தோசைக்கும் என்ன வித்தியாசம்…..???
இட்லி கூட்டம் கூட்டமா வரும்.
தோசை சிங்கிளாத்தான் வரும்.
தம்பி!! ஒரு பீர்!!!!
என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?
அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!”
“பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!”
“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”
போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”
“அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்…

இன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க நீங்க கேட்டீங்களா
நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க
வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா இல்லை பெண் வீட்டுக்காரரா
இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு – ராமு : ?!?!?!?!?!?
சர்தார்ஜி 1: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
சர்தார்ஜி 2: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
ஆப்பரேசன் தியேட்டர்ல டெலிபோன் வைக்கவேண்டாம்னு
சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்
ஏன் என்ன ஆச்சு
இப்ப அதுவும் டெட் ஆயிடுச்சு

“எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கார்
டாக்டர்..” “இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..?”
“பவர் கட் ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காரே..”
ஒரு பொண்ணு திரும்பி பார்த்துடா ஒரு பைய்யனோட தூக்கம் போச்சு
நாலு பசங்க திரும்பி பார்கலனா ஒரு பொண்ணோட தூக்கம் போச்சு..!
நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்”
“அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க”

அவன்: நான் என் பொண்டாட்டிக்கு தினமும் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி முத்தம் கொடுப்பேன்… நீங்க எப்படி?”
இவன்: “ஹி.. ஹி.. நானும் தான்… நீங்க ஆபீஸ்க்கு போனதுக்கு அப்புறம்”
அவன்: “கொய்யால! !!!!!”

குடிப்பழக்கம் உள்ள நண்பர்களுடன் பழகுவதைக் குறைக்கணும்…………
.
.
.
.
ஏன் என்றால் ?>
.
.
.
.
.
.
.
நம்ம சரக்கை காலி பண்ணிடுறானுங்க.

எல்.கே.ஜி.
பையன் : அப்பா நேத்து வந்த கணக்கு டீச்சரு சூப்பர் பிகர்ப்பா
அப்பா : டேய் டீச்சர் எல்லாம் அம்மா மாதிரி டா
எல்.கே.ஜி.
பையன் : அப்பா, பாத்தியா சைடு கேப்ல நீ ரூட் போடுர….

Girl:-Oru Azhagana Kavithai Solluda..
Boy :-Unnai Kandadhum ennai marandhen..
Girl:-Appuram?
Boy:-Un thangai’yai kandadhum unnai’ye marandhen..!

அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை…
காதலி : !!!!

நிருபர்- உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேணும் என்று நினைக்கிறீங்க?
நடிகை-நிகழ்கால கணவரை விட நல்லா இருக்க வேணும் என்று தான்
ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..
பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய “டார்லிங்”னு கூப்பிடுறார்.
டாக்டர்-”சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை.”
நர்ஸ்-”டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!”

அந்நியன் : தினமும் பஸ் ல டிக்கெட் எடுக்காம போறீயே,அது உனக்கு தப்பா தெரியல்லையா???
மனிதன் : டேய்,முகத்துல விழுந்து இருக்கிற முடியை விளக்கிட்டு பாருடா.நான் தான் இந்த பஸ் ட கண்டேக்டர்

தமிழ் ஆசிரியர் : ஏன்டா…. நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க?
மாணவர்கள் : நீங்க தான சார், நேற்று சொன்னீங்க “துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்……
==============================
ஆசிரியா் ; இந்த period முழுக்க நீ வெளியில நில்லு
அப்போ தான் உனக்கு அறிவு வரும்.
மாணவன் ; அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு
வராதா????
ஆசிரியா் ; ???????????????.

சார் : தலை வலின்னு 1 நாள் லீவ் எடுத்த சரி,
கால்வலின்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?
மாணவன் : தலை ஒன்னு தானே இருக்கு, ஆனா
கால் இரண்டு இருக்கே சார்!
==============================
ஆசிரியர்: பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை பிரிச்சுப் போட்டு கிட்டு வாறது?
மாணவி:நீங்க தானே டீச்சர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லி கிட்டு இருந்தீங்க…
==============================
கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் HOME WORK செய்யலை சார்!
==============================
ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 இருக்கும் சார்!
ஆசிரியர்: நல்லா கேளு! முதல்லே இரண்டு கோழி தர்றேன். மறுபடியும் இரண்டு தர்றேன். இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?
மாணவன்: 5 தான் சார்!
ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்! சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?
மாணவன்: 4 சார்.
ஆசிரியர்: குட்!. இப்ப, 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 சார்!
ஆசிரியர்: அது எப்படிறா 5 கோழி வரும்?
மாணவன்: என்கிட்டே ஏற்கனவே ஒரு கோழி இருக்கு சார்.
ஆசிரியர்: !!!!

கோடை விடுமுரையில்…
மகன்;      அப்பா அப்பா எனக்குதான் லீவு
விட்டுட்டாங்களே,  எப்ப‌ ப்பா டூரு போகபோறோம்?
அப்பா;    இருடா, உங்க‌ பக்கத்து வீட்டு ஆன்டீக்கு
லீவு விடலையாம்…
(இப்படியும் ப்ளான் பன்னுவாங்க‌ போல‌)
==================================

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
அனுமதி கேட்க்கவும் இல்லை…
அனுமதி வழங்கவும் இல்லை…
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
“கன்னத்தில் கொசுக்கடி”
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..
இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்…
[படித்ததும்…மறந்துவிடவும்]
கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க‌
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்
இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

தனுஷ்: என்னை மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது. பாக்க பாக்க தான்
பிடிக்கும்.
தமன்னா: என்ன பிடிக்கும்? பைத்தியமா?
சிம்பு: நான் ஒரு கண்ணாடி மாதிரி லே.
வில்லன்: அப்போ கொஞ்சம் நேரம் ஆடாம நில்லு லே.ஷேவ்
பண்ணிக்கிறேன்.

A Lady On Phone:
“Hello Ganesh? Sir, I want To Meet & Talk To You.
You Are The Father Of One Of My Kids.”
Stunned and shocked Man screamed:
“Oh my God! I am married and so careful with modern prevention tactics and how could this happen to you? You can ruin me”
Are you Rani?
Lady replied, “No.”
Then Pramila?
No, No.
Sita?
No, No, No
Rupa?
No, No, No, No.
puspa?
No, No, No, No, No.
Charu?
No………………………………………… ………..oo.
Lady in confusion scolded Ganesh:
“Sir, I am The Class Teacher Of Your Son.”

தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா ?
தத்துவம் 2:
ஆட்டோக்கு ‘ ஆட்டோ’ ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .
தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
( என்ன கொடுமை சார் இது!?!)
தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!
(ஹலோ ! ஹலோ !!!!)
தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)
தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்…
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
( ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

அனகோண்டாவிற்கும் அலுமினிய குண்டாவிற்கும்
என்ன வித்யாசம் ?
பதில் : தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா
உள்ள தண்ணி இருந்தா அது அலுமினிய குண்டா ?!

AFTER HEARING NEWS, “GANGULY INTO COMMENTARY”:
எங்க ஊரு ரவுடி பேரு சங்கிலி…
கமெண்டரி பக்கம் போயிடானமே கங்குலி???
AFTER HEARING NEWS, “VENKATESH PRASAD AS A BOWLING COACH”:
ரஜினி நடிச்ச படம் பாட்சா..
பிரசாத்’லாம் ஒரு கோச்சா???
SO DESPERATE OF NOT HEARING ANYTHING ABOUT SHOHIB AKTHAR IN RECENT TIMES:
பக்கத்து ஊட்டுகாரன்கிட்ட கடன் கேட்டன் தரல..
இந்த அக்தர் ரொம்ப நாளா எங்க போனன்னே தெர்ல..

அதிகமா “Like”பண்ணும் ஆமபுளையும் அதிகமா “Comment” பண்ணும் பொம்புளையும் நிம்மதியா facebookala இருந்ததா சரித்திரமே இல்லை
 

லவ்” பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்….
ஆனா, “லவ்” பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்…..
–தேவதாஸ்.

 

அடங்காத கேள்விகள்”
1. திருவண்ணமலைக்கு பக்கத்துக்கு ஊரு ஜிஞ்சி..
காதுல எதுக்கு வக்கிறாங்க பஞ்சி?
குளிர் அடிச்சா, காதுல எதுக்கு வக்கிறாங்க பஞ்சி?

2. மொன கடைல விக்கிறாங்க பீடி..
திருவள்ளுவர் ஏன் வளத்தாரு தாடி?
3. பள்ளம் தோண்டி நடுவாங்க செடி..
மழைக்கு முன்னாடி எதுக்கு வருது இடி?
சத்திமா எனுக்கு இதுக்கெல்லாம் ஆன்சர் தெர்லபா..

A newly married husband saved his wife’s number on his mobile as “My life”
After one year of marriage he changed the number to “My Wife”
After 2 years of marriage he changed the number to “Home”
.
.
.
After 5 years of marriage he changed the number to “Hitler”
After 10 years of marriage he changed the number to “Wrong Number”

The Boss asked to his secretary :
This week we are going abroad.so make arrangements.
Secretary makes call to her husband :
This week My Boss and I will be going abroad. so take care of yourself.
Husband makes call to his secret lover :
My wife is going abroad this week.So we can spend this together.
Secret lover makes call to the small boy to whom she gives private tution and told :
This week I have some urgent work so there will not be any classes this week and you need not come this week.
The small boy makes call to his grandfather :
Grandpa this week there will not be any classes
as my teacher has some urgent work.so we can spend this week together.
Grandfather (The Boss)makes call to his secretary :
cancel the trip as I will spend this week with my grandson.We will not attend that meeting.
The Secretary makes call to her husband :
Sorry My boss has cancelled the trip.so I will not go
abroad this week.
The husband makes call to his secret lover :
sorry my wife has cancelled her trip. so we will not be able to spend this week together.
The secret lover calls to the small boy :
There will be classes as usual this week also.
The small boy makes call to his grandfather (The Boss):
Grandpa sorry,There will be classes as usual this week also.so I will not spend this week together.
The Boss makes call to his secretary :
We will attend that meeting .so make arrangements.
What is this??
This is deadlock!!!!!


Notebook, Facebook yenna difference?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Theriyala
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Innum Theriyala
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Nejama Theriyalaya
.
.
.
.
.
.
.
.
Aiyo paavam
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
sari Nan solren…
“Note Bookla” Teacher Mattum Than Correct Pannalam,
But “Face Bookla” Teacherayae Correct Pannalam.

1) YOU = Very Nice
YOU = Very Smart
YOU = Very Lovely
YOU = Very Lucky
YOU = Very Beauty
ஐ…. சிரிப்பைப் பாரு…. இது எனக்கு வந்த SMS….

3) ஒரு கவிதை…
திரும்பி…
திரும்பி
பார்க்க வைத்தது…
அவளின்
திரும்பாத முகம்…
ஆனால்…
அவள் திரும்பியதும்
மாறியது
என் முகம்…
ஏனெனில்
சப்பை பிகர் மா……

4) டார்லிங்… எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா இருக்க சொல்றாரு….
சரி… சரி… உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன் தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்….

5) நான் உங்களிடம் ஒரு கல் கேட்டேன்….
ஒரு சிலையே கொடுத்தீர்கள்..
ஒரு இலை கேட்டேன்.. ஒரு மலரையே கொடுத்தீர்கள்…
என் கண்ணீரை துடைக்க ஒரு கைகுட்டைக் கேட்டேன்… நீங்களோ உங்கள் கையைக் கொடுத்தீர்கள்…
உண்மையாகவே நீங்கள் ஒரு செவிடு…….

6) ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது…
ஆ: தேசிய மலர்?
மா: ஒரு சின்ன தாமரை…
ஆ: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மா: கரிகாலன் கால போல…
ஆசிரியர் அடிக்கிறார்…
மா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது….

7) கேர்ள்: எக்ஸாம் டைம்’ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்…
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்…
8) பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்…
கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு….
பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா…

9) கருப்பும் ஒரு கலர்…
வெள்ளையும் ஒரு கலர்…
ஆனால் ப்ளாக் & வொய்ட் டி.வீ. என்பது ஒரு கலர் டி.வீ. இல்ல….
என்ன கொடும சார் இது…….

10) நபர் – 1: இந்த மொபைல் நல்லாருக்கே…எங்க வாங்கின?…
நபர் – 2: ஓட்டப் பந்தயத்தில் இதை வாங்கினேன்…
நபர் – 1: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?
நபர் – 2: மூன்று பேர்…. இந்த மொபைல் ஓனர், ஒரு போலீஸ் மற்றும் நான்….

—- திருடிட்டு வந்த நாய் எப்படி சமாளிக்குதுன்னு பாருங்க மக்களே….

12) ஹார்ட் அட்டாக்’னா என்ன?
பஸ் ஸ்டாப்’ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்… உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்… அது உன் பக்கத்துல வரும்… உனக்கு வியர்த்து கொட்டும்… அவ தன்னோட அழகான லிப்ஸ்’ஐ ஓபன் பண்ணி ”இந்த லவ் லெட்டர்’ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க”ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு…
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்…….

13) வாஸ்கொடாகாமா இப்போது உயிருடன் இருந்தா அவர் பெயர் என்னத் தெரியுமா?
இஸ்கொடாகாமா… ஏன்னா “WAS ” இறந்த காலம்… “IS ” நிகழ் காலம்….
எங்களுக்கும் இங்கிலீஷ் லிடேரச்சர் தெரியும்ல…. எப்பூடி……
14) எல்லா பிகர்’யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்’ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்’ஸ் மென்டாலிட்டி..
So, Boys are Genius…. Girls are Selfish….

15) காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு….
காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்…
காதலன்: சரி… கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு….
காதலி: ?!?……..
16) நண்பர் – 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா…
நண்பர் – 2: அப்படி நீ என்னத்த தொட்ட?
நண்பர் – 1: அவளோட தங்கச்சியைத்தான்….
நண்பர் – 2: ?!?…………..
17) சூப்பர் பஞ்ச் டயலாக்…
நான் நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்த நான் ஒன்னும் கெட்டவன் இல்ல…
நான் கெட்டவன்னு உண்மையை ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல…
———- நான் அவன் இல்லை….

19) கர்நாடகா தண்ணீரும், கேர்ள்’சின் கண்ணீரும் ஒண்ணுதான்… ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்… ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..
—– வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்…..
20) பெஸ்ட் கவிதை in 2010 :
உன்னை யாரும்
காதலிக்கவில்லை
என்று கவலைப்பட வேண்டாம்…
அது
உன் வருங்கால
மனைவியின்
வேண்டுதலாகக் கூட
இருக்கலாம்…………
(ஹையோ….ஹையோ…. பிகர் மாட்டாததுக்கு எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு……

Boy went & proposed a girl
Girl : What will you do for me?
Boy: I’ll do what ever you want. I’ll bring stars from the sky ; I’ll jump from where you tell ; I’ll do anything for you.
Girl : Can you complete M.B.A. without arrears?
Boy : தங்கச்சி வீட்டுக்குப் போம்மா ; அம்மா திட்டப் போறாங்க.

தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..
மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..
தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்.. மகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!
தாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!
மகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..
தாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!
மனைவி : ஏங்க, நான் ஒண்ணு சொல்லுவேன். அடிக்க மாட்டேங்களா
கணவன் : சும்மா சொல்லு செல்லம்
மனைவி : நான் கர்ப்பமா இருக்கேங்க
கணவன் : அட, எவ்ளோ சந்தோஷமான விஷயம். இதைப்போய் வருத்தமா சொல்றியே.
மனைவி: இப்பதாங்க நிம்மதியா இருக்கு. இதே போல தான் காலேஜ் படிக்கும் போது அப்பா கிட்ட சொன்னதுக்கு அடிக்க வந்துட்டார்..

மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”










 
























சனி, 9 பிப்ரவரி, 2013


ஹோமோசெக்ஸ் கணவர் மீது வழக்கு

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த வரதநல்லூர் தாளகுளத்தைச் சேர்ந்த முனியப்பன் மகள் ஸ்ரீசுதா(28). இவருக்கும், சின்னப்பெரிச்சிபாளையத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் விஸ்வநாதன்(30) என்பவருக்கும் கடந்த 10.7.2011ல் பவானியில் திருமணம் நடந்தது. 
இந்நிலையில் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீசுதா அளித்த புகாரில், ’’திருமணத்தின்போது 57 பவுன் நகை, ரூ.7.5 லட்சத்தை பெற்றோர் கொடுத்தனர். திருமணத்துக்கு ரூ.8 லட்சம் செலவு செய்யப்பட்டது. திருமணம்  முடிந்ததில் இருந்து  தாம்பத்ய உறவை கணவர் புறக்கணித்தார்.
அவரது அலுவலகத்தில் பணிபுரியும் காஞ்சிபுரத்தை சேர்ந்த சக ஊழியருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தது பின்னர் தெரியவந்தது. இது குறித்து, கேட்டபோது என்னை அடித்து காயப்படுத் தியதோடு, அப்படித்தான் வாழ்வேன் எனவும் தெரிவித்தார்.

எனது பெற்றோரிடம் ரூ.15 லட்சம் வரதட்சணையாகக் கொடுக்க வேண்டும் என கேட்டு அடித்து துன்புறுத்தினார். விஸ்வநாதனின் கொடுமை தாங்காமல் கடந்த ஏப்ரலில்  அங்கிருந்து சொந்த ஊரான தாளகுளம் திரும்பிவிட்டேன்.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் விஸ்வநாதன், மாமியார் அன்னபூரணி(52), மாமனார் செல்லமுத்து(57), உறவினர் சின்னவேலு(48), இவரது மனைவி தனபாக்கியம்(42) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியிருந்தார்.

விஸ்வநாதன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஓரினச்சேர்க்கை என்றால் என்ன ?

ஆண், ஆணுடன் அல்லது பெண் பெண்ணுடன் உடல்உறவு வைத்துக் கொள்வது தான் ஓரினச்சேர்க்கை என்பர். இவர்களை ஆங்கிலததில் “கே” (Gay) என்பர். பெண் குணம் கொண்ட நபர்களும் ஆணாக பிறந்து தன்னை பெண்ணாக மாற்றி வாழும் “அலிகளும்” ஓரினச்சேர்கையில் ஈடுபடு கின்றனர். “அலிகள்” என்று சொல்லும் போது பலருக்கு ஆண்குறியும் (Penis) விரைப்பையும் (Scrotum) இருக்கும். தன் வாழ்க்கையை பெண்மாதிரி பாவித்துக் கொண்டு உடல்உறவுக்கு அழைத்து, ஆணிடம் தன் ஆசனவாய் வழியே தான் உடல்உறவு வைத்துக் கொள்கின்றனர்.

சில அரவாணிகள், டாக்டர்களிடம் சென்று கொடூரமாக தண் ஆண்குறியையும், விரைப்பையும் முழுவதுமாக வெட்டி சிறுநீர் கழிக்க மட்டும் ஒரு சிறு இடம் விட்டு தைத்துக் கொள்வர். இதில் 10 அலிகளுக்கு 8 அலிகள், பிறப்பு உறுப்பு பகுதியில் சீழ்வைத்து, உடல்நலம் கெட்டு இறந்து விடுவார்கள். ஒரு சிலர் பிழைத்து “நான் முழுவதுமாக” பெண்ணாகவே மாறி விட்டேன் என்று தன்னை அழைத்துக் கொள்வார். அவர்களுக்கு முறையான பெண்குறி (யஹஞ்ண்ய்ஹ) இருக்காது. அந்த அலி தனக்கு பெண்குறி இருப்பதுபோல் நடித்து தன் வாடிக்கைக்காரர்களுடன் உடல்உறவு கொள்ள அழைத்து, பின் தனது ஆசனவாய் (Vagina) வழியில்தான் உடல்உறவு வைத்துக் கொள்வார்.

இப்படி ஆண் ஆணுடன் உடல்உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு பால்வினை நோய்கள் பல, விருந்து வைத்து விடுகின்றன. அதன்மூலம் HIV என்ற எய்ட்ஸ் பங்காளி யையும் வரவழைக்க உதவுகின்றன. இந்த ஓரினச்சேர்க்கை எங்கு எவரிடத்தில் அதிகம் நடைபெறுகின்றது?

1. ஒரே இடத்தில் தங்கி வாழும் ஹோட்டல் சர்வர்கள்.
2. ஹாஸ்டலில் ஒரே அறையில் பலபேர் தங்கிப் படிக்கும் மாணவர்கள்.
3. ஒரே ரூமில் தங்கி வாழும் பஸ் டிரை வர்கள் மற்றும் வேலையாட்கள்.
4. பெண்கள் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பள்ளி கல்லூரி தோழிகள்.
5. நீண்ட தூரத்தில் ஒரே இடத்தில் தங்கி வாழும், மனைவியைப் பிரிந்து பணியாற்றும் காவலாளிகள், இராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், ஆபீசர்கள், மருத்துவ பிரதிநிதிகள்.
6. ஒரே சிறையில் அடைபட்டு கிடக்கும் சிறைக்கைதிகள்.
7. மனைவி குழந்தை பெற்றுவிட்டால் இப்போது உடல்உறவு அவளுடன் கொள்ளக் கூடாது என்ற தப்பான எண்ணத்தில் தன்னுடன் ஆபீஸில் வேலைபார்க்கும் நண்பர்களுடன் உடல்உறவு வைத்துக் கொள்பவர்கள்.
8. ஆண் கலைஞர்கள் நடனம், நாட்டியம், டிஸ்கோ, பாட்டு என்று ஊர் ஊராய் சென்று ஒரே இடத்தில் தங்கி நிகழ்ச்சி நடத்துபவர்கள்.
9. பெரிய செல்வந்தார்கள் உயர் மட்டத்தில் வாழும் ஆண்கள், பார்ட்டி, டின்னர், சீட்டாட்ட ‘கிளப்பில்’ ஆடிவிட்டு அதன்பின் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நபர்கள் என இந்த ஓரினச்சேர்க்கை வட்டம் விரிவடைந்து வருகின்றது.

ஓரினச்சேர்க்கை இனத்தில இரண்டு வகை உண்டு

ஒன்று

ஆசனவாயை உடல்உறவுக்கு கொடுப்பவர்கள். இவர்களை “பாசிவ் ஹோமோ (Pasive-Homo) என்பர்.

இரண்டாவது வகை

தன் உடல்உறவுக்கு தன் ஆண்குறியை செலுத்த மற்றவர் ஆசனவாயை பயன்படுத்துவர். இவரை “ஆக்டிவ் ஹோமோ (Active-homo) என்பர்.

இயற்கைக்கு மாறாக இப்படி ஒரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபர்கள் வழியாக உலகம் ஒரு நாசத்தை நோக்கி அதாவது எய்ட்ஸ் என்ற நரகத்தை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது.

1. சிபிலிஸ் என்ற கிரந்திநோய் (Syphillis) :

இந்த நோயை தன்னிடம் வைத்து இருக்கும் ஒரு (எஹஹ்) ‘கே’ யுடன் அதாவது ஓரினச் சேர்க்கையில் வாழும் ஒரு ஆணுடன், வேறுஒருவன் உடல்உறவை வைத்துக் கொள்ளும் போது அவனது ஆசனவாயில் 10 முதல் 90 நாட்களில் இந்த நோய் புண்களாகத் தோன்றும் இந்த நோய்க்குரிய கிருமியின் பெயர் டிரப்னிமா பாலிடம் (Treponema Palidum). இது மிக்க கொடிய நஞ்சுக்குணம் கொண் டது.

ஆசனவாயின் உட்புறத்திலும் ரெக்டம் (Rectum) என்ற குதப்பகுதியிலும், புண்கள் தோன்றி இருக்கும். அதனால் மலம் கழிக்கும்போது வலி, எரிச்சல், சீழுடன் கூடிய திரவம் அல்லது ரத்தமும் வடிய ஆரம்பிக்கும். 6 மாதம் வரை வைத்தியம் மேற்கொள்ளா விட்டால், இந்த வியாதி ஆசனவாயில் ஓரப்பகுதியிலும் காண்டிலோமோலேட்டா (Condylomata) என்ற கொடிய வியாதியை தோற்றுவிக்கும். இது புற்கள் மாதிரி முளைத்து வளர்ந்து இருக்கும்.

வாய்வழிப்புணர்ச்சி இருந்தால் வாயிலும் புண்கள் தோன்றும். அரை இடுக்கு களில் வலிக்காத நெரிகட்டிகள் தோன்றும்.

முறையான வைத்தியம் பார்க்கா விட்டால் இரத்தம் மூலம் உடலின் மற்ற இடங்களுக்கும் பரவி தோல் முழுவதும் தட்டையான கொப்பளங்கள், பத்துக்கள் தோன்றும். தீராத தொல்லைகளை கொடுத்து பரம்பரைக்கும் நோயை நீடிக்க வைத்துவிடும்.

பெண்கள் :

ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட பெண்களுக்கும், இந்த சிபிலிஸ் நோய் வரும்.

ஆண்களுக்கு வரும் தொல்லைகள்மாதிரி இவர்களுக்கும் தோன்றி தொல்லை கொடுக்கும்.

2. கோனாரியா என்ற வெட்டை நோய் :

ஓரினச்சேர்க்கை மூலம் ஒருவனுக்கு கோனோரியா (Gonorheae) என்ற வெட்டை நோய் வரும். இதனால் ஆசன வாய் சுற்றி எரிச்சல், அரிப்பு அத்துடன் மலப்பாதையில் சீழ் திரவம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் மலப்பாதையில் சீழ் திரவம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் மலம் வரும் பாதையில் கட்டிகள் தோன்றி மலப்பாதையை அடைத்து தொல்லை கொடுக்கும். ஆசனவாய் உளபகுதியை (Prostocopy) உருப்பெருக்கி கருவி கொண்டு சோதிக்கும் போது, மலக்குடல் பாதை சிவந்தும், புண்கள் தோன்றியும், புண்ணில் இருந்து சீழ் கோர்த்து இருப்பதும் தெரிய வரும். இரத்தமும் வடியும் நிலை இருக்கும். சீழ் திரவத்தை எடுத்து பரிசோதனை செய்யும்போது வெட்டை கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்படும். கல்சர் டெஸ்ட் செய்யும்போது இந்த நோய் இருப்பது உறுதிசெய்யப்படும். வாய் வழி புணர்ச்சி கொண்டவனுக்கு தொண்டையில் இக்கிருமி பரவி தொண்டையில் புண் ஏற்பட்டு எச்சில் முழுங்க முடியாமை ஏற்படும். இப்படி பல தொல்லைகள் ஓரினச்சேர்க் கையில் ஏற்படும்.

பெண்கள் :

இது மாதிரி ஓரினச்சேர்க்கை கொண்ட பெண்ணுக்கும் ஆசனவாய் பாதையில் இந்த வெட்டை நோய் தொற்றி தொல்லை கொடுக்கும். ஆசனவாய்ப்பகுதி களில் கட்டிகள் தோன்றும், வெள்ளைபடும். (Trichomonas Vaginalis) நோயும் வெள்ளைபடும் நோயும் சேர்ந்து அவளுக்கு மிக துன்பம் கொடுக்கும். இரத்தமும் மஞ்சள் நிறத்திரவமும் ஆசனவாய் வழியே வடிய ஆரம்பிக்கும். முறையான பரிசோதனை செய்து தகுந்த மருந்து கொடுத்து நோயை குணமாக்க வேண்டும்.

3. ஹெர்பிஸ் என்ற அக்கிக் கொப்பளங்கள் :

ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட ஒரு Gay ஆசனவாயைச் சுற்றிலும், அதன் உட்புற பாதையிலும் புண்ணாக வெடிக்கும்.

மலம் கழிக்கும்போது எரிச்சல், ஆசனவாயைச் சுற்றிலும் அரிப்பும் (Mucoid) ஏற்படும். மூக்காய்டு என்ற சளித்திரவம் ஆசனவாயில் இருந்து வடிந்து கொண்டு இருக்கும் இந்தப் புண்கள் வரக் காரணமான HIV ஹெர்பிஸ் சிம்பிளக்ஸ் ஹோமினிஸ் என்ற நுண்கிருமி, கிருமியை சிநேகம் பிடித்து கூட்டிவரும்.

வாய்வழிப்புணர்ச்சி கொண்ட நபருக்கு வாயில் உதட்டு ஓரங்கள் உதட்டின் உட்புறப்பகுதி, தொண்டைப்பகுதி என பல இடங்களிமல் இந்த நோய்க்கிருமி இடம் பிடித்து சிறு சிறு புண்களைக் கொடுக்கும். இந்த புண்கள் வலி கொடுக்கும் தொண்டை அழற்சி ஏற்பட்டு எச்சில் விழுங்க முடியாமல் அவதியுற நேரிடும். முறையாக வைத்தியம் மேற் கொள்ளாவிட்டால் இப்புண்கள் கடுகுகள் மாதிரி சிறு, சிறு புண்களாக பல மாதம், வருடங்கள் என திரும்ப திரும்ப தோன்றிக் கொண்டே இருக்கும். மிக கவலை தரும் நோயாக மாறும்.

பெண்கள் :

ஓரினச்சேர்க்ககையில் ஆசனவாய்ப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி கொண்ட பெண்களுக்கு, ஆண்களுக்கு வருவது மாதிரியே இப்புண்கள் ஆசனவாயில் வாயின் உதட்டுப்பகுதி தொண்டைக்குழி முதலிய இடங்களில் தோன்றி அவதியு வைக்கும்

4. ஜெனிட்டல் வார்ட்ஸ் (Gental Warts) :

ஓரினச்சேர்க்கையில் ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட ஒருவனுக்கு ஜெனிட்டல் வார்ட்ஸ் என்ற விஷப் பருக்கள், ஆசனவாய்ப் பகுதியில் உடல்உறவு வைத்துக் கொண்டு சில வாரங்களில், ஏன் சில மாதங்களில் தோன்றக் கூடும். இந்த நோய் கிருமியின் பெயர் ஹீயூமன் பாப்பில் பாமா வைரஸ் (Human/ Papilloma Virus) என்பதாகும். ஆசனவாயை சுற்றிலும் பெரினியம் என்ற ஆண்குறிக்கும் மலத்து வாரத்துக்கும் இடையில் உள்ள இடத்திலும் இப்பருக்கள் தோன்றும். ஆசனவாய் உட்புறத்திலும், இந்த விஷச் செடி முளைக்கும். மலம் வரும்போது வலியும், எரிச்சலும், இரத்தமும் கலந்து வடிந்து தொல்லை கொடுக்கும். வாய்வழிப் புணர்ச்சி கொண்டவர்களுக்கு வாயின் ஓரங்களிலும் தொண்டைக்குழியிலும் இப்படி பருக்கள்தோன்றி மிக எச்சில் விழுங்க முடியாமல் தொல்லை கொடுக்கும். முறையாக வைத்தியம் மேற்கொள்ளாவிட்டால் புற்றாகவும் (Cancer) மாறக்கூடும்.

பெண்கள் :

ஆசனவாய் வழிப்புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி கொண்ட பெண்களுக்கும் விஷப் பருக்கள் தோன்றி தொல்லை கொடுக்கும்.

5. மஞ்சள் காமாலை வியாதி :

ஓரினச்சேர்க்கையர், ஆசனவாய் வழி உடல்உறவு வைத்துக் கொள்பவருக்கு “ஹெப்படைடிஸ் பி வைரஸ்” (Hepatitiis B) என்ற நுண்கிருமி இரத்தத்தின் வழியே உள்ளே நோயை உண்டாக்கி விடுகின்றது. இந்த நோய் கண்ட “அலிக்கு” உடல் சோர்வு, களைப்பு, வயிறு, வீக்கம் சிறுநீர் மஞ்சளாக போதல், கண்ணின் வெள்ளைப்படலம், மஞ்சளாக மாறுதல் முதலியன ஏற்படும். ஜான்டிஸ் என்ற இந்த மஞ்சள் காமாலை நோய் மிக விஷத்தன்மை கொண்டது. நோய்க்கிருமி மிகக் கடுமையாக இருந்தால் பிழைப்பது அரிது.

7. அமீபியாசிஸ், சியார்டியாசிஸ் என்ற வயிற்றுக்கடுப்பு, வயிற்றாலை நோய்கள் :
ஓரினச்சேர்க்கையில் அவனது ஆசனவாய் புணர்ச்சி மூலம் அமீபியாசிஸ் சியார்டியாசிஸ் போன்ற வியாதிகள் தோன்றி வயிற்றுக்கடுப்பு, வயிற்றாலை போன்ற நோய்கள் வரும். இதற்காரணமான பார சைட்டுகள் ள்(Parasites) என்ற கிருமிகள் என்டமிபாகிஸ்டோலிகா சியார்டியா லேம்லியா (Entamoeba/ Histolylica/ Giardia/ Lambia) என்பதாகும். இவைகளால் பலவிதமான வயிற்றுக் கோளாறு உண்டாகும் அடிவயிற்று வலி சளி மாதிரி நுரையுடன் கூடிய மலம் வெளி யேறுதல், மலத்துடன் இரத்தம் வருதல் என பலவித கஷ்டங்களைக் கொடுக்கும். அதாவது கழிசல் நோய் கொடுக்கும்.

பெண்கள் :

ஓரினச்சோக்கை மூலம் ஆசனவாய் வழியாக இந்த கழிசல் நோய்கள் குடல்களில் பரவி வயிற்றுவலி, வயிற்றாலை, வயிற்றுக் கடுப்பு என பெண்களும் துன்பப்படுவர்.

இவ்விதம் ஓரினச்சேர்க்கை மூலம் வரும் பால்வினை நோய்களைப் பற்றி விரிவாக அறிந்தோம். எல்லா பால்வினை நோய்களும் எய்ட்ஸ் நோய்க்கு வழிகாட்டி நிற்கும் இது .

இல்லறமே நல்லறம் ! ஆபத்தில்லாதது!
மனநிலை தடம்புரள அனுமதிக்காதீர்கள்!
வாழ்வு உயர்வானது !
நன்றி : ‘இல்லறம்’

ஓரினச்சேர்க்கை ஆசை எப்படி வருகிறது?-காம கேள்வி பதில்

1) டாக்டர், நான் ஒரு பள்ளி மாணவன். எனக்கு பெண்களை பார்த்து ஆசை வரவில்லை. மாறாக, ஆண்களை தான் பிடித்திருக்கிறது. ஏன் இந்த ஓரினச்சேர்க்கை (ஹோமோசெக்ஸ்) ஆசை எனக்கு வருகிறது?
-நவீன், மற்றும் பல ஆண்கள்.

2) டாக்டர் என் பெயர் சவீதா. எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. பேருக்கு நான் என் கணவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டாலும் என் மனம் பெண்களைத்தான் நாடுகிறது. இந்த லெஸ்பியன் உணர்வு எப்படி எனக்கு வந்தது? ஹோமோசெக்ஸ் உணர்வு வருவதற்கு என்ன காரணம்?
- சவீதா, மற்றும் இதே போன்ற கேள்வியோடு பல பெண்கள்.


மருத்துவரின் பதில் :

ஏன் ஓரினச்சேர்க்கை உணர்வு வருகிறது என்பது குறித்து இரண்டு வகையான விளக்கங்கள் உள்ளன.

அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ பிறக்கும்போதே ஓரினச் சேர்க்கையாளராக பிறக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது ஓரினச் சேர்க்கை ஆசை உடையவர்களின் மூளை பிறக்கும்போதே மற்றவர்களின் மூளையை விட வித்தியாசமாக இருப்பதால், இது போன்ற ஆசை உடையவர்களாக இருக்கிறார்கள். அதே போல, இது போன்றவர்களின் டி. என் ஏ எனும் மூலக்கூற்றிலும் சில மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடித்து உள்ளனர்.

இதற்கு எதிராக, ஓரினச்சேர்க்கையாளர்கள் பிறப்பதில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்று பல விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் நிபுணர்களும் கூறுகிறார்கள். இதற்காக பல சூழ்நிலை காரணங்களை இவர்கள் முன் வைக்கிறார்கள். ஏன் ஆண்கள் ஆண்களை விரும்புபவர்களாக ஆகிறார்கள், ஏன் பெண்கள் பெண்களை புணர விரும்புகிறார்கள் என்பதற்கு சிறு வயதில் ஏற்படும் நிகழ்வுகளே காரணம் என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக:

சிறு வயதிலேயே ஹோமொசெக்சுக்கு பெரியவர்கள் உடன்பட வைத்தல்.
ஆண் பிள்ளைகள் பெண்களோடு மட்டுமே விளையாடுதல், அல்லது பெண் குழந்தைகள் ஆண்களோடு மட்டுமே விளையாடுதல்.
விடலைப் பருவத்தில், விளையாட்டாக ஹோமோசெக்ஸ் செய்தல்

இது போல மேலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஓரினச்சேர்க்கையை பல நாடுகள் இன்னும் மதம், கலாச்சாரம் போன்ற பெயர்களை சொல்லி தடை செய்து உள்ளன. எந்தெந்த நாடுகள் ஹோமோசெக்ஸை தடை செய்துள்ளன என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம். சில நாடுகளில் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். ஏன், மரண தண்டனை கூட வழங்கப்படுகின்றது.
எந்த நாடோ, மதமோ, கலாச்சாரமோ யாருடைய படுக்கை அறையையும் எட்டிப் பார்க்க கூடாது, அது அவரவர் சுதந்திரம் என்பதே என் சொந்தக் கருத்து. இதனால் ஓரினச் சேர்க்கையாளர்களை கண்ணியமாக நடத்துங்கள்.



ஹெச்.ஐ.வி எய்ட்ஸும் ஹோமோ செக்ஸுவாலிடியும்

இதனை போன்ற ஒரு சென்ஸிடிவ் விசயங்களை எழுதுவதா வேண்டாமா என்று பல முறை யோசித்து பின்னர் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தால் இதனை எழுதுகிறேன்.

என்னுடைய நண்பர் ஒருவர் Gay எனப்படும் ஹோமோசெக்ஸுவல், அவர் தற்செயலாக இங்கு ரத்த தானம் கொடுக்க சென்ற போது அவரை பற்றி அறிந்து கொண்ட மருத்துவர்கள், ஹோமோசெக்ஸுவல் ஆண்களிடம் STD, HIV மற்றும் Viral Hepatitis போன்ற நோய்கள் அதிக அளவில் இருப்பதாக உறுதிபடுத்தபட்டு இருப்பதால்அவரின் ரத்தத்தை வாங்க மறுத்து விட்டதாக கூறினார் http://www.fda.gov/BiologicsBloodVaccines/BloodBloodProducts/QuestionsaboutBlood/ucm108186.htm.

இது என்ன புது கதையாக இருக்கிறதே என்று நினைத்து செய்தியை தோண்டிய போது கிடைத்த செய்திகள் ஆதாரங்கள் வருத்தமடைய செய்தன.

CDC யின் அறிக்கை படி (http://www.cdc.gov/hiv/topics/surveillance/basic.htm#international), MSM எனப்படும் ஆண்களிடம் உறவு வைத்து கொள்ளும் ஆண்களுக்கே HIV தொற்று ஏற்படும் பெரும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கிறது. இது பெண்களிடம் இருந்து பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பரவுவதை விட மிக அதிகம்.

இந்தியாவில் என்ன நிலை என்றறிய இணையத்தை தோண்டிய போது 
NACO எனப்படும் National Aids Control Organisation ம் ( http://www.nacoonline.org/Quick_Links/HIV_Data/)அவர்ட் எனப்படும், (http://www.avert.org/aidsindia.htm ) International HIV & AIDS charity நிறுவன அறிக்கைகளையும் படிக்க நேர்ந்தது. அதன் படி, இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் கூட இதே நிலை தான் என்றறிய முடிந்தது.

இதனை ஏன் எழுதுகிறேன் என்றால் இந்தியாவில் இருக்கும் சில மூட பழக்கவழக்கங்களும் அதன் காரணமாக நடக்கும் சில கொடுமைகளும் தான்.

எய்ட்ஸ் பெண்களிடம் இருந்து பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் தான் பரவும், ஆண்களிடம் உறவு கொண்டால் பரவாது என்ற மூட நம்பிக்கை எப்படியோ இந்திய சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது.

இந்த நம்பிக்கையிலேயே தற்போது MSM ங்கள் அதிகரித்து இருப்பதாக நினைக்கிறேன்.

சில நாட்களுக்கு முன் மதுரை அருகே ஒரு 8 வயது சிறுவன் சில சிறுவர்களால் வண்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறான் (http://timesofindia.indiatimes.com/city/chennai/Four-teens-held-for-raping-murdering-Madurai-boy/articleshow/9319095.cms) என்ற செய்தி படித்ததும் பகீர் என்றது.
அதுவும் கொலை செய்த சிறுவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதனை எல்லாம் பார்க்கும் போது இந்தியாவில் இதனை குறித்த விழிப்புணர்ச்சியை அரசு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அதே போல செக்ஸ் கல்வி கட்டாயம் ஆக்கபட வேண்டுமோ என்றும் தோன்றுகிறது.
ஹார்மோன் கோளாறு, மற்றும் உளவியல் மாற்றம் தான் எல்லா நாட்டிலும் ஓரினசேர்க்கை உருவாக காரணம் 

The Analyst said... அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருக்கும் ஒரு ஆண்களும் ஒரு போதும் இரத்ததானம் செய்ய முடியாது என எனக்கு இப்போது தான் தெரியும். எல்லா நாடுகளிலும் இவ்வாறல்ல. இங்கிலாந்தில் அண்மையில் தான் இந்த தடையை நீக்கினார்கள். ஆனால் அங்கும் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருப்பின் அடுத்த ஒரு வருடத்திற்கு மட்டும் இரத்த தானம் செய்ய முடியாது என உண்டு. இங்கு NZ இல் 5 வருடம் பொறுக்க வேண்டும்.

ஆண்கள் ஆண்களுடன் உறவு கொள்வதால் HIV கூடுதலாகப் பரவுவது ஏன் என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டும். Sexual act தான் காரண‌மே ஒழிய அவ்வுறவு அல்ல. ஆண்கள், ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் போது அவர்களுக்கிடையே குத வழி மூலம் பாலுறவு வைத்துக் கொள்வது ஆண்-பெண் உறவுகளை விடக் குறிப்பிட்டளவு கூட. குதவழி மூலம் பாலியல் உறவு கொள்ளலால் HIV பரவும் விகிதம், பெண்ணுறுப்பின் மூலம் உறவு கொள்ளும் போது பரவும் விகிதத்தை விட குறிப்பிட்டளவு அதிகம். அதனாலேயே ஆண்-ஆண் உறவில் HIV கடத்தப்படும் விகிதம் கூட. So I think it's the sexual act the authorities need to worry about,r ather than sexual orientation and ask people at the interview about that. ஏனெனில் ஆண்-பெண் உறவுகளிலும் குதவழி மூலம் பாலியல் உறவு கொள்பவர்கள் உண்டு. ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் உறுதியான monogamous உறவு வைத்திருப்பாரெனில் அவருக்கு HIV இருக்கும் சந்தர்ப்பம் குறைவே. அவரை இரத்த தானம் செய்யத் தடை செய்வது discrimination அல்லவா? Spain ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் இரத்த தானம் செய்வதைத் தடுப்பதில்லை. ஆனால் ஒருவரை விடக் கூடுதலானவர்களுடன் பாலியல் உறவு வைத்திருந்தவர்கள் (அவர்கள் ஆணோ பெண்ணோ) அடுத்த ஒருவருடத்திற்கு இரத்த தானம் செய்ய முடியாது. இது நியாயமாகப் படுகிறது எனக்கு. ஏனெனில் ஒரு பாதுகாப்புமின்றிப் பலருடன் தொடர்பு வைத்திருப்பின் நிச்சயம் HIV கடத்தப்படும் விகிதம் அதிகமே.

"இந்த நம்பிக்கையிலேயே தற்போது MSM ங்கள் அதிகரித்து இருப்பதாக நினைக்கிறேன்."

இதனால் homosexuality அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கென ஏன் நினைக்கிறீர்கள்?

"சில நாட்களுக்கு முன் மதுரை அருகே ஒரு 8 வயது சிறுவன் சில சிறுவர்களால் வண்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறான் என்ற செய்தி படித்ததும் பகீர் என்றது.
அதுவும் கொலை செய்த சிறுவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். "

:( மிகவும் துக்கரமான விடயம். ஆனால் இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் HIV இப் பற்றி ஒருகணமேனும் நினைத்திருப்பார்கள் என நினைக்கிறீர்களா?

"இதனை எல்லாம் பார்க்கும் போது இந்தியாவில் இதனை குறித்த விழிப்புணர்ச்சியை அரசு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அதே போல செக்ஸ் கல்வி கட்டாயம் ஆக்கபட வேண்டுமோ என்றும் தோன்றுகிறது."

சனி, 2 பிப்ரவரி, 2013

காதலிக்காக

என் கூட இருப்பாயா காதலியேஉனக்கு என்னில் இருந்து என்ன வேண்டும் என்று சொல்
ருகிறேன்
என
் உடலை அசைய வைக்கு உயிர் வெண்டும
பிரி
த்து தருகிறேன்
டலெங்கும் குருதியை வழங்கும் இதயம் வேண்டுமாபிடிங்கி தருகிறேன்
என
் உடலினில் உயிரை வாழ வைக்கும் இதய துடிப்பு வேண்டுமா
பறி
த்து தருகிறேன்
னால்என்னை மட்டும் விட்டு போகாதே என் காதலிய
என்ன
ை மட்டும் விட்டு போகாதே என் காதலியே

நட்பை காதலாக மாற்றுவது எப்படி?

என் அறைத்தோழனும் அவனது பக்கத்து ஆத்து பெண்ணும் சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். பெண் இவனை விட சில வயது இளையவள். இவன் வேலைக்கு வந்த பின்பும் இருவரும் தினமும் தொலைபேசும் அளவு நட்புள்ளவர்கள்.
இவன் அவளை ரொம்ப ஆண்டுகளாக காதலித்துக்கொண்டு இருக்கிறான். எங்களிடம் சொல்லிய அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை. அதற்கு காரணங்களும் அடுக்கி வைத்திருந்தான்.
இப்படி இருக்க, ஒரு நாள் ஞாயிறன்று அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்க, எனக்கு மட்டும் செம போர் அடித்தது. சரி ஏதோ நம்மாலான ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று அவனது மொபைல்ஃபோனை எடுத்து, அந்த பெண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.
“சில விஷயங்களை சொற்களால் வெளிப்படுத்த முடியாது. மனதால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். வெளிப்படுத்த என் மனது தயார்….. இனிய காலை வணக்கம்”
சில நொடிகளில் அந்த பெண்ணிடம் இருந்து வந்த பதில்,
“என் மனதும் தயார்.”
இது போதுமே, அன்றைக்கு ஃபோனை காதில் வைத்தவன், இன்று வரை கீழே வைக்கவில்லை.
இதேபோல் நீங்களும் உங்கள் உயிர்த்தோழியை காதலியாக்க என்னாலான சில யோசனைகள்…

முதலில் உங்கள் தோழிக்கு உங்கள் மீது காதல் இருக்கின்றதா என்று சோதிக்கவேண்டும்.
  • உங்களை பார்த்ததும் சிரிக்கும் சிரிப்பில் ஒரு சந்தோஷமும், பாதுகாப்பும் இருக்கும்.
  • உங்களைப்பார்த்து சிரிக்கும் சிரிப்பிற்கும், மற்றவர்களை பார்த்து சிரிக்கும் சிரிப்பும் வித்தியாசமாக இருக்கும்
  • நீங்கள் அடுத்த பெண்ணிடம் பேசினாலோ, பசங்களுடன் பேசினாலோ ஒரு பொசசிவ்னெஸ் காண்பிப்பாள்
  • ஒரு நாள் கூட உங்களிடம் பேசாமல் இருக்க மாட்டாள்
  • விடுமுறை நாட்களில் கூட உங்களைப்பார்க்க விரும்புவாள்
  • மற்றவர்களைப்பற்றி உங்களிடம் புகார் செய்வாள் (பெண்/ஆண் நண்பர்கள்)
  • காசு விஷயத்தில் கொடுத்த காசை திரும்ப கேட்கமாட்டாள், ரெஸ்டாரண்டில் அவள் பணம் கொடுப்பாள்.
  • உங்கள் உடை விஷயத்தில் அக்கறை காட்டுவாள்
  • ஃபோனில் பேசும்போது கூட என்ன உடை அணிந்துவருகிறாய் என்று கேட்பாள்
  • ஒருமுறையாவது உங்களுக்காக அழுவாள்(அது சின்ன விஷயமாக இருந்தாலும்)
  • உங்களிடம் இருக்கும்போது, தான் பெண் என்பதை மறந்து இருப்பாள் (பாட்டு பாடலாம், உடை கலைந்து இருக்கலாம் etc)
  • சண்டை போட்டு நீங்கள் முறுக்கிக்கொண்டு இருந்தாலும், அவள் தானாக இறங்கி வருவாள்.
  • நீங்கள் அவளுடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவதற்கு சுதந்திரம் கொடுப்பாள்

காதல் இருப்பது உறுதியாயின், கீழ்க்கண்டவற்றை செயல்படுத்தி காதலாக்குங்கள்
  • தயவு செய்து முறுக்கிக்கொண்டு நிற்காமல், உடனடியாக காதலை சொல்லுங்கள்.
  • அவளுக்கு செல்லப்பெயர் வைத்து கூப்பிடுங்கள், அவளுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை குறைத்துக்கொண்டே செல்லுங்கள்.
  • அவளை அடுத்த ஆண்களுடன் பழகவிடாதீர்கள்,  உங்களுக்கு பக்கத்து சீட்டை எப்போதும் அவளுக்காக துண்டு போட்டு வையுங்கள் and vice versa ;).
  • மேலே சொன்ன கதைபோல் மெசேஜ் அல்லது ஈமெயில் அனுப்புங்கள்
  • இரவு நீண்டநேரம் பேசிக்கொண்டு(கடலை) இருக்கும்போது, அப்படியே லேசாக காதலை தலையைச்சுற்றி மூக்கைத்தொடுங்கள்
  • உங்கள் வீட்டில் அவளை அறிமுகப்படுத்துங்கள், உங்கள் குடும்பம் எவ்வளவு அழகு என்று காட்டுங்கள். முக்கியமாக உங்கள் அம்மாவிற்கும் அவளிற்கும் நல்ல உறவை ஏற்படுத்திக்கொடுங்கள்.
  • அவள் எங்கு கூப்பிட்டாலும் கூடவே செல்க. நெருக்கத்தில் உங்களை மறந்து பேசிக்கொண்டு இருக்கும்போது சொல்லி விடுங்கள்.
  • காதலைச்சொல்வதற்கு முன் ஒரு நிமிடம்(நிஜமாகவே 60 நொடிகள்) அவள் கண்ணையே பார்த்துக்கொண்டிருங்கள். அவள் கண்கள் நாணி, கண்களாலேயே என்ன வேண்டும் என்று கேட்கும்போது காதலைச்சொல்லுங்கள். கண்டிப்பாக சக்ஸஸ் தான்.

வெள்ளை கருப்பு

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு
சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'

'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு
வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன்
போட்டுருக்கு'

'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'

பிண ஊர்வலம்

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள்
சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே
நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக
இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,

"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த
அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?"

"முதலில் செல்வது எனது மனைவி."

"என்ன ஆயிற்று அவருக்கு?"

"எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது"

"இரண்டாவது பிணம்?"

"அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது"

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், "இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"

அதற்கு அவர் சொன்னார், "வரிசையில் போய் நில்லுங்கள்"

துப்பறியும் நிபுணர்

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே
சர்தார்ஜிகள்தான்.

முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம்
காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன்
ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா
எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. சர்தார்ஜி
சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு.
ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்?
பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு
இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு,
அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார்
அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத்
துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில
விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான்
சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன்
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன்
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார்
அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய
முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!'

செத்தும் செலவு வைப்ப...

"தாஜ்மஹால்" இருக்கே...., அது நமக்கு தெரியப்படுத்தறது என்னவாம்?

"உலக அதிசயங்கள்ல ஒண்ணு?"
முழுக்க முழுக்க சலவைக்கல்?

இந்தியாவுக்குப் பெருமை தேடித்தரும் சின்னம்?

- இப்படியெல்லாம் நீங்க நெனச்சா அது தப்பு!

"செத்தும் செலவு வைப்பாள் காதலி!"

ஒரு சிரியஸ் கதை : கட்டாயம் படிக்கவும்


ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.

உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமா முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.

அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை. அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.

அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள்.. அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,SURFEXCEL போடு கறை போயிடும்" என்றது.
இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு! நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்கிறன் .

சிந்தனை வரிகள்





சிந்தனை வரிகள்

நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும்
இடைவிடாத போராட்டத்தின் இறுதியில்
நீரோடை வெற்றி பெறுகிறது
தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்




ஒரு நாள் ஆத்திரம்.. பல நாள் துக்கத்தை தரும்...



வீழ்வதில் வெட்கப் படாதே!  வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்!



நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை மகிழ்ச்சியா வைத்துருக்க நாமும் விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்



படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
 

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
 

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.



வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.



பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.



ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.



எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.



மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.




கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.




கவனியுங்கள்உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக வருகின்றன்.உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.உங்கள் செயல்களைக் கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்அவைகளே உங்கள் நடத்தையாகின்றனஉங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன

ஒரு தந்தையின் கடிதம்:



ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை
சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப்
பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

மனதை நெருடிய கவிதை.........

நெற்றியில் பட்டை இட்டால் ஹிந்து.

கழுத்தில் சிலுவை அணிந்தால் கிறிஸ்துவன்.

தலையில் குல்லா அணிந்தால் இஸ்லாமியன்.

ஒருவனே கடவுள் என்றால் பக்திமான்.

கடவுள்களே இல்லையென்றால் நாத்திகன்.


இப்படி அடையாளங்களோடு வாழும் மனிதர்களே..!!


எதனை இட்டுக் கொண்டால்

அல்லது

அணிந்து கொண்டால்,

நாங்கள் "மனிதர்கள்" என்று அழைக்கப்படுவோம்..??

வந்தது யாரு?

வந்தது யாரு?
(சிறுகதை)

“அடுத்தாளு யாரம்மா?...அட நம்ம சுந்தரியா?...வாம்மா..வந்து வாங்கிக்க இந்த வாரக் கூலிய!...ஓ...பரவாயில்லயே...நூத்தம்பது ரூபா வாங்கிட்டே...லீவே போடாம...வந்துட்டே போலிருக்கு!...சரி...சரி...நவுரு அடுத்தாளு வரட்டும்...” காண்ட்ராக்டர் சித்தாளுகளை நக்கலடித்தபடியே கூலியை வினியோகம் செய்து கொண்டிருந்தார். அருகில் நின்று கொண்டிருந்த மேஸ்திரி பரமனுக்கு எரிச்சலாயிருந்தது.

ஒரு வழியாக எல்லோருக்கும் கூலி கொடுத்து முடித்த காண்ட்ராக்டர் மேஸ்திரிக்கும் தர, வாங்கிக் கொண்டு அவசர அவசரமாகச் சென்று சைக்கிளை எடுத்தார் மேஸ்திரி. காற்று இற்ங்கிக் கிடந்த பின் சக்கரம் அவரைப் பார்த்து சிரித்தது.

“அடக் கெரகமே..சமயத்துல காலை வாரிடுச்சே!” தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சைக்கிளைத் தள்ளியபடி நடக்க ஆரம்பித்தார்.

“என்னங்க மேஸ்திரி சைக்கிள் என்னாச்சு?...தள்ளு மாடல் வண்டி ஆயிடுச்சா?” சிரித்தபடியே கேட்டாள் சித்தாள் சுந்தரி.

“அட அமாம் புள்ள...டயர் பஞ்சர் ஆயிடுச்சு!” என்று கூறியவர், அவளுடன் பேசிக் கொண்டே நடையைத் தொடர்ந்தார்.

“ஏம் புள்ள...உன்ர வூடு எங்க இருக்கு?”

“உங்க வூடு தாண்டி நாலாவது சந்துக்குள்ளார போனா மொத வூடு என்ர வூடு தான்!” வெற்றிலை எச்சிலை “புளிச்” செய்தபடியே பதில் சொன்னாள் சுந்தரி.

“அப்பன்...ஆத்தா...யாராலும் கூட இருக்காங்களா?”

“ம்...அப்பனுமிருக்கான்...ஆத்தாளும் இருக்கா!”

இதற்குள் வீடு வந்து விட, “வா புள்ள...ஒரெட்டு உள்ளார வந்து...ஒரு தம்ளர்..காப்பித் தண்ணி குடிச்சிட்டுப் போ”

முதலில் “வேண்டாமுங்க!” என்று கூறி ரொம்பத் தயங்கியவள், மேஸ்திரியின் வற்புறுத்தலால் அரை மனதுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

இரண்டு வயதுக் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி வந்து நின்றாள் மேஸ்திரியின் மனைவி. “யாரு மச்சான் இது?” கேட்டாள்.

“அட...இவ எனக்குக் கீழ வேலை பார்க்கற சித்தாளுடி..பேரு சுந்தரி”

ஏனோ தெரியவில்லை...மேஸ்திரியின் மனைவி ரங்கம்மா முகத்தில் வெறுப்பு குடி கொண்டது.

“இவ என்னத்துக்கு இங்க வந்திருக்கா?” எரிச்சலுடன் கேட்டாள்.

“ஏய்...என்ன புள்ள இது?...வூட்டுக்கு வந்தவியள எதுக்குன்னு கேட்கறே?” மனைவியை அதட்டினார் மேஸ்திரி.

“அதில்ல...சும்மாத்தான் வந்திருக்காகளா...இல்ல ஏதாச்சும் ஜோலியா வந்திருக்காகளான்னு கேட்டேன்” வெறுப்புடன் சொன்னாள்.

“ஏய்....போய் ஒரு டம்ளர் காப்பித் தண்ணி போட்டுக் கொண்டாடி அவளுக்கு” மேஸ்திரி பரமன் ச்ற்று அதட்டலாகவே சொன்னான்.

மிகுந்த தர்ம சங்கடத்துடன் மேஸ்திரியின் மனைவி கொடுத்த காப்பியை வாங்கிப் பருகிய சுந்தரி உடனே விடை பெற்றாள்.

அவள் போனவுடன், “ஏண்டி முண்டம்....உனக்கு ஏதாவது அறிவு கிறிவு இருக்கா?...வந்தவங்க முன்னடி இப்படியா பேசறது?...இப்படியெல்லாம் பேசினா யாராச்சும் வீட்டுக்கு வருவாங்களா?”

“ஏன்...ஏன்...அய்யாவுக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது அவளைப் பேசினா?....அவ மேல அத்தனை அக்கறையா...இல்ல ஆசையா?” தன் முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் கொண்டாள்.

“ஏய்...செருப்பு பிஞ்சுடும்டி....நரம்பில்லாத நாக்குல வரம்பில்லாமப் பேசாதடி”

“மேஸ்திரிகள்ன்னா சித்தாளுகளை வப்பாட்டியா வச்சுக்குவாங்க-ன்னு ஊரு உலகம் சொல்லுறது நெஜந்தான் போலிருக்கு...ஏன் மச்சா நீ அவளை வெச்சிருக்கறியா?...வேண்டாம்யா... நாந்தான் ரோசாவாட்டம் இருக்கேனில்லே” கோபத்தில் ஆரம்பித்த ரங்கம்மா அழுகையுடன் முடித்தாள்.

“அட என்ன புள்ள இது?...நீயே இல்லாததையும்...பொல்லாததையும் நினைச்சுக்கிட்டு..அழுவறே!..உனக்கென்ன பைத்தியமா?”

‘ஆமாம்யா...உன்ர மேல உசுரையே வெச்சிருக்கற நான் பைத்தியக்காரிதான்...வேணாம் மச்சான்...இனிமே எந்தச் சிறுக்கியையும் வூட்டுக்குக் கூட்டியாராதே மச்சான்” அழுகையைத் தொடர்ந்தாள். அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் பரமன் திண்டாடிப் போனான். பாவம்!...அவந்தான் என்ன செய்வான்...அவன் மனைவி ரங்கம்மா படிக்காதவள். பக்கத்து வேஸ்ட் காட்டன் மில்லுல பஞ்சு புடுங்கற வேலைக்குப் போறா...அப்பப்ப புருஷன் மேல் சந்தேகம் வரும்....அதற்குக் காரணம்,,புருஷன் மேலுள்ள அளவு கடந்த பாசம்...அன்பு...இன்னும் என்னென்னவோ...!

ஒரு மாதம் கழித்து ஒரு நாள் லேசான மழைத் தூறல் விழுந்து கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்த பரமன் வாசலில் ஒரு பைக் நின்று கொண்டிருப்பதைக் கண்டு “யாராயிருக்கும்?” என்ற யோசனையுடன் வீட்டுக்குள் நுழைந்தான். அங்கே அசத்தலாக பேண்ட் சர்ட் அணிந்திருந்த சுமார் இருபத்தாறு வயது மதிக்கத்தக்க டிப்டாப் இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான்.

“ஏ புள்ள..இங்க வா புள்ள!”

வெளியே வந்த ரங்கம்மா கணவனைப் பார்த்து “வாங்க!” என்று கூறி விட்டு, அந்த இளைஞனைப் பார்த்து, “இவருதாங்க...என் வீட்டுக்காரர்!” என்றாள்.

“அப்படியா?” என்ற அந்த இளைஞன் பரமனைப் பார்த்து லேசாய் புன்னகைத்து விட்டு, ‘சரி...ரங்கம்மா...நான் கிளம்பறேன்...மழை விட்டிடுச்சு போலிருக்கு” என்ற்படி எழுந்தான்.

‘அட இருங்க சார் காப்பித் தண்ணி போட்டுட்டு இருக்கேன் ஒரு வாய் குடிச்சிட்டுப் போலாம்!” என்றாள்.

“பரவாயில்லை ரங்கம்மா...இன்னோரு நாள் வர்றேன்” என்ற அவன் வெளியேறப் போகையில், பரமன் தன் மனைவியிடம் கேட்டான். “ஏண்டி நான் யாருன்னு அவருகிட்ட சொன்னே...அதே மாதிரி அவரு யாருன்னு என்கிட்ட சொன்னா என்ன கொறைஞ்சா போய்டும்?”

“அட அதை மறந்துட்டேன் பாருங்க!.. இவரு எங்க வேஸ்ட் காட்டன் மில்லுல சூப்பர்வைஸர்...நம்ம வீடுன்னு தெரியாம மழைக்கு இங்க ஒதுங்கி நின்னாரு....நான் யாருடா?ன்னு எட்டிப் பார்த்தேன்...இவரு...அதான் வலுக்கட்டாயமா உள்ளார கூப்பிட்டு உக்கார வெச்சேன்..ஆனா பாருங்க ஒரு வாய் காப்பித் தண்ணி கூட குடிக்காம போறாரு!” என்றாள்.

அந்த டிப்டாப் இளைஞன் சாவகாசமை வெளியேறி பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தான். அவன் போவதையே கதவருகே நின்று பார்த்து கொண்டிருந்த ரங்கம்மா வீட்டுக்குள் திரும்பினாள்.

“ஏண்டி...வேஸ்ட் காட்டன் மில்லுக்கு வேலைக்குப் போற பொம்பளைங்க அங்கிருக்கற சூப்பர்வைஸர் கிட்டே கொஞ்சம் அப்பிடி..இப்படி இருப்பாங்கன்னு நான் கேள்விப் பட்டிருக்கேன்...இப்ப நேரிலேயே பார்த்திட்டேன்!..எத்தனை நாளா இது நடக்குது”

“மச்சான்...வேண்டாம் மச்சான்!..நாக்கு அழுகிப் போகும்...கண்டபடி பேசாதீங்க!” அழ ஆரம்பித்தாள்.

“பேசுவேண்டி...உன்னைய இனிமே வேலைக்கு அனுப்பாம...வீட்டோட வெச்சாத்தான் திருந்துவே!” கத்திக் கொண்டே வேகமாக வெளியேறினான்.

இரவு பத்து மணி வாக்கில் வீட்டுக்குள் நுழைந்த பரமன் கோபமாய் திரும்பிப் படுத்துக் கொண்டிருந்த மனைவி ரங்கம்மாவிடம் வந்து , “ஏம் புள்ள...கோபமா?” என்று குழைந்தான்.

“க்கும்...கண்டபடி...வாய்க்கு வந்ததெல்லாம் பேசிப் போட்டு...இப்ப மட்டும் என்ன கொஞ்சல்?” அவன் கைகளைத் தள்ளி விட்டாள்.

“நீ எப்படி எதேச்சையாய் வந்த சூப்பர்வைஸரை வீட்டுக்குள்ளார கூட்டிட்டு வந்தே?...அதே மாதிரிதான் நானும் அன்னிக்கு அந்தச் சித்தாளு சுந்தரிய ஒரு வாஇ வார்த்தைக்கு, “உள்ளார வந்திட்டுப் போ புள்ள”ன்னு கூப்பிட்டேன், அவளும் யதார்த்தமா வந்தா...அதுக்குப் போயி...நான் அவளை வச்சிருக்கேன்..அதுஇதுன்னு குதிச்சே!..இப்பப் புரியுதா?“ நாசூக்காகப் பேசினான்.

தன் கணவன் கண்களையே இரண்டு நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தவள், சடாரெனக் கட்டிப் பிடித்து அவன் கன்னங்களில் அவேசமாய் முத்தமிட்டாள். “மன்னிச்சுக்க மச்சான்”

“சரி..சரி...எப்படியோ நீ புரிஞ்சுக்கிட்டியானா அது போதும்” என்றான் பரமன்.

(முற்றும்)

நெஞ்சை தொட்டவை


தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய
தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா
அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.

மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு

மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

அரசியல்வாதிகளில்
பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின்
அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும். தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.
இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்
படைத்துள்ளது.


ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே
தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!